Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு தயாரிப்பு குண்டுடன் ஒருவர் கைது

February 22, 2018
in News, Politics, World
0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செயலிழக்கச்செய்யப்படாத கைக்குண்டொன்றை வைத்திருந்த நபர் ஒருவர் திஸ்ஸமஹாராம ஹபரவெவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவன்திஸ்ஸபுற பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்த வேளையில் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து அவரது வீட்டிலிருந்து மேலுமொரு கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் 41 வயதுடைய பெறலிஹெல பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

அம்பாள்புரம் மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Next Post

உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி!!

Next Post

உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures