Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில் வெளிவிவகாரச் செயலாளர்கள் பங்கேற்பு

December 8, 2018
in News, Politics, World
0

வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதிலாக வெளிவிவகாரச் செயலாளர்களே இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.

அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால், பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் செயற்பட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் மற்றும் அமைச்சர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிவிவகாரச் செயலாளர்களை வெளிநாட்டுத் தூதரகங்களில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் கொழும்பில் ஷங்ரி லா விடுதியில் நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்சின் 47 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில், அந்நாட்டின் தூதுவரின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார்.

அதேபோன்று ஜப்பானிய சக்தரவர்த்தி அகிஹிட்டோவின் 85 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார் !!

Next Post

ஓய்வூதியத்தை எண்ணி செயற்படுபவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது: ரெஜினோல்ட் குரே

Next Post

ஓய்வூதியத்தை எண்ணி செயற்படுபவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது: ரெஜினோல்ட் குரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures