Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டில் இருந்து தாயகம் சென்ற தாய் மரணம்!

January 6, 2018
in News, World
0

வெளிநாட்டில் இருந்து தாயகத்தை சுற்றிப்பார்க்க சென்ற மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவில் வசித்து வருபவருமான பத்மநாதன் சுகிர்தராணி (வயது 84) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

குறித்த மூதாட்டி தனது மகனுடன் தாய் நாட்டைசுற்றிப் பார்ப்பதற்காக அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் யாழ் நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளனர். நேற்று முன்தினம் யாழில் நிலவிய காலநிலை ஒத்துவராமல் குறித்த மூதாட்டி உடல் நிலை திடீரென சோர்வடைந்து மயக்கம் அடைந்துள்ளார். அப்போது மாலை 5 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் இவருடைய இதயம் செயலிழந்து இவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் இவரது சடலம் அவுஸ்ரேலியாவிற்கு எடுத்து செல்வதற்காக உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Previous Post

கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் சந்திப்பு

Next Post

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு இலங்கையில் நேர்ந்த பரிதாபம்!

Next Post

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு இலங்கையில் நேர்ந்த பரிதாபம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures