Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட 19 இலங்கையர்கள் கைது!

December 23, 2017
in News, Politics, World
0
வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட 19 இலங்கையர்கள் கைது!

வெளிநாட்டில் இருந்து 19 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 19 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட19 பேரும் நேற்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது தலா 10000 ரூபாய் பிணை மற்றும் 2 இலட்சம் ரூபா 2 சரீர பிணைகளில் விடுவிக்குமாறு மினுவங்கொட நீதவான் ஷிலனி சத்துரன்தி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

இரனவில், கொடிகாமம், திருகோணமலை, புல்மூட்டை, நீர்கொழும்பு, பேருவளை, வென்னப்புவ, உடப்பு, பொத்துவில், மூதூர் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 பேருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் மீண்டும் அடுத்த வருடம் ஜுன் மாதம் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

எதிர்க்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

புத்தாண்டில் புதுக்கட்சி? ரஜினி

Next Post

புத்தாண்டில் புதுக்கட்சி? ரஜினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures