வெகுசனஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு தகவல்மற்றும் வெகுசன ஊடக அமைச்சுநடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதற்கமையநாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின்தகவல்களையும் சேகரிக்க அந்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்ளைப்பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின்படிஇத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காககடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டுஅரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டவெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து மாத்திரம் தகவல்கள்திரட்டப்படவுள்ளன.
அதற்கமையதயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தகவல் மற்றும் வெகுசனஊடக அமைச்சின் இணையதளம் ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ளஅல்லது அமைச்சுக்கு வருகை தருவதன் மூலம்பெற்றுக் கொள்ள முடியும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படிபூர்த்தி செய்த படிவத்தை எதிர்வரும்மார்ச் மாதம் முதலாம் திகதிக்குமுன்னர் கிடைக்கும் வகையில் ‘பணிப்பாளர் (ஊடகம்), தகவல் மற்றும்வெகுசன ஊடக அமைச்சு, இல.163,‘ எதிசிதி மெதுர’, கிருலப்பனை வீதி,பொல்ஹேன்கொட, கொழும்பு – 05. ‘ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக 011-2513645 என்ற இலக்கத்துக்கு அழைப்பினைமேற்கொண்டு தெரிந்துகொள்ள முடியும் என்று அமைச்சின் ஊடகப்பிரிவுதெரிவித்துள்ளது.

