வவுனியாவில் வீதியோரங்களில் மரங்களை நாட்டும் நற்காரியமொன்றினை இரு இளைஞர்கள் முன்னெடுத்துள்ளமை தொடர்பில் பலரது பாராட்டும் உந்துதலும் கிடைத்து வருகின்றது.
வவுனியாவை சேர்ந்த கிருஸ்ணன் சண்முகபிரியன் மற்றும் வின்சன் மதுசன் என்ற இரு இளைஞர்களுமே இம் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக 100 மரங்களை வீதியோரமாக நாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவதுடன் வீதியோரங்களில் மக்களால் வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் இடையூறான விடயமாக தெரிவித்துள்ளனர்.