இரானி கோப்பை போட்டியின் முதல் இன்னிங்சில் விதர்பா அணி, 5 விக்கெட்டுக்கு 705 ரன்கள் குவித்தது.
ரஞ்சி கோப்பை ‘சாம்பியன்’ விதர்பா, ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை (5 நாள்) கிரிக்கெட் நாக்பூரில் நடக்கிறது. இரண்டாவது நாள் முடிவில், விதர்பா அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 598 ரன்கள் குவித்து இருந்தது. வாசிம் ஜாபர் (285), வான்கடே (44) அவுட்டாகாமல் இருந்தனர்.
மழை காரணமாக நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் 3 மணி நேரம் தாமதமாகத் துவங்கியது. ஒரு ரன் மட்டும் கூடுதலாக எடுத்த வாசிம் ஜாபர் (286), முச்சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். வாத்கர் 37 ரன்கள் எடுத்தார்.
28 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட, மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 705 ரன்கள் குவித்தது. வான்கடே (99), சர்வேத் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இன்னும் இரு நாட்கள் மட்டும் மீதமுள்ள நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில், விதர்பா அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.