Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப் புலிகள் கொலைஞர்கள்; ஈ.பி.ஆர்.எல்.எவ். சரித்திர நாளேடு!

February 4, 2019
in News, Politics, World
0

இன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தால் வெளியிடப்பட்ட சரித்திர நாளேட்டில் 80 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்ட தோழர்கள் பத்மநாபா உட்பட அனைவரும் ”விடுதலைப் புலிகளாலே படுகொலை செய்யப்பட்டார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு வசனத்தை அவர்கள் பாவித்திருக்கின்றார்கள்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதுக் கட்சி ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பில் தாங்கள் பயப்பிடுகின்றீர்களா என்று கேட்கப்பட்டமைக்கு அவர் வழங்கிய பதில் வருமாறு:

நாம் பயப்படவில்லை. இன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதற்குப் பிரதம விருந்தினராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். அவர் எம்மைப் பற்றிக் கடுமையாகச் சாடினார். அவர் சாடட்டும்.

அங்கு ஒரு சரித்திர நாளேடு வெளியிடப்பட்டது. அந்த நாளேட்டில், 80 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்ட தோழர்கள் பத்மநாபா உட்பட அனைவரும் ‘‘விடுதலைப் புலிகளாலே படுகொலை செய்யப்பட்டார்கள்” அவர்கள் பாவித்திருக்கின்றார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று மட்டும் எழுதப்படவில்லை. 60 ரெலோ தோழர்களும் இந்தத் தினத்திலே விடுதலைப் புலிகளாலே படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இத்தனை பொதுமக்கள் விடுதலைப் புலிகளாலே படுகொலை செய்யப்பட்டார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளைப் பற்றி விமர்சிக்கக்கூடாது என்று ஒரு கருத்து இங்கு முன்வைக்கப்பட்டது. நல்ல விடயம். ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் மாநாடு நடைபெற்றது. அதுவும் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதில், விடுதலைப் புலிகள் படுகொலை செய்தார்கள், படுகொலை செய்தார்கள்என்று எழுதி வெளியிடப்பட்டுள்ளது.  தயவுசெய்து இந்தக் கேள்வியையும் அவர்களிடத்தில் நீங்கள்ஒருக்கா கேளுங்கோ!

Previous Post

அரச சிற்றூழியர் நியமனம் அந்தந்த மாவட்டத்துக்கே! சுமந்திரன் உறுதி

Next Post

வடக்கில் அரசியல்வாதிகளால் போதைப்பொருட்கள் கடத்தல்!

Next Post

வடக்கில் அரசியல்வாதிகளால் போதைப்பொருட்கள் கடத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures