Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதை மஹிந்தவால் மறுக்க முடியுமா | சஜித்

January 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து மாத்தயா. யோகி ஆகியோரை பிளவுபடுத்தவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதை இல்லை என்று மறுக்க முடியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆளும் தரப்பின் பிரதம கோலாசனை நோக்கி வினவினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பேருந்துகள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் .

இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கஇ உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள் வழங்கப்பட்டன.

அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும் அதனை வைத்துத்தான் நீங்கள் இவ்வாறு பேருந்துகளை அன்பளிப்பு செய்வதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெயர்ட் பவர் என்பவர் ஹிட்லரின் படைகளுக்கும் முசோலினியின் படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி உதவினார். இது இரு அணியிலுள்ளவர்களையும் பிளவு படுத்தும் தந்திரம்.

அதேபோன்றுதான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தயாவும் யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவுப்படுத்ததும் போர் தந்திரம் செயற்பத்தப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எனது தந்தை காசு கொடுத்தது என்றால் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவும் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார் இதனை இல்லை என்று மறுக்க முடியுமா என்றார்.

Previous Post

10 கோடி ரூபா செலுத்தக் கூடிய இயலுமை எனக்கில்லை | நாட்டு மக்களிடமிருந்தே பணத்தை சேகரிக்கவுள்ளேன் – மைத்திரி

Next Post

அனைத்து இன மக்களின் பிச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி தீர்வு காண்போம் | உலமா சபையின் 100ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் ஜனாதிபதி

Next Post
தமிழர் பிரச்சினைகளுக்குக்  தீர்வு வேண்டும் – ரணில்

அனைத்து இன மக்களின் பிச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி தீர்வு காண்போம் | உலமா சபையின் 100ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures