“ சிங்களவர்கள் நித்திரையில் இருக்கின்றனர் என்று விஜயகலா என்ற பெண் புலி நினைத்துக்கொண்டி ருக்கின்றார், சிங்களவர்கள் நித்திரையில் இல்லை. நாங்கள் விழித்துக் கொள்ளும் நேரமொன்று இருக்கின்றது. நாம் விழித் துக்கொள்ளும்போது தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவராலும் எம்மைத் தடுக்க முடியாது. அதனால் உடனடியாகச் சட்டத்தை நடை முறைப்படுத்துங்கள்.
இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பியல்நிஸாந்த தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது மேலும் தெரிவித்ததாவது:கூட்டரசில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயகலா போன்றவர்கள் நாட்டை அழிக்கும் வகையில் இவ்வாறான பரப்புரை களைச் செய்யும் போது, அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன அவற்றைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே மைத்திரிபால அரசதலைவர் பதவியிலிருந்து விலகிச் செல்லவேண்டும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தி விஜயகலாவுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். அமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அல்லது அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு கூறி மக்களுக்கு இனிப்புக்களைக் கொடுத்து ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டால் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனது படுக்கை மெத்தைகளைச் சுருட்டிக்கொண்டு வீட்டுக்கு ஓட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்” என்றார்
“ நாடு மிகவும் மோசமான நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இரவு பத்து மணிக்கு நித்தி ரைக்குச் செல்லும் நாட்டின் அரசதலைவருக்கு நாடு முகம்கொடுத்துள்ள மிகவும் பாரதூரமான பிரச்சினைகளை மறுநாள் நித்திரையில் எழுந்து பத்திரிகைகளைப் பார்க்கும்போதே அறிந்துகொள்கின்றார்.
எரிபொருள்களின் விலை அதிகரிக்கின்றது. கல்வித்துறையைச் சீரழிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் ஆசியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.
கூட்டரசில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தமது குறுகிய அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களைத் தூண்டிவிடும் வகையில் பல்வேறு இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் – என்றார்.