Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விகாராதிபதியிடம் கப்பம் கோரிய மூவருவக்கு விளக்கமறியல்

June 10, 2019
in News, Politics, World
0
விகாராதிபதியிடம் கப்பம் கோரிய மூவருவக்கு விளக்கமறியல்

தம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி  அம்பகஹவெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி ஜவாத் எனும் அமைப்பின் பெயரில் மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் தேரர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 3 தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

19 வயதுடைய சானக பிரசாத் கருணாரத்ன, 25 வயதுடைய அதுல ஜயசாந்த மற்றும் 34 வயதுடைய மிஹிது குணரத்ன என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கோட்டாபாயதான் ஜனாதிபதி வேட்பாளர்!!

Next Post

முல்லைத்தீவில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!!

Next Post
முல்லைத்தீவில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!!

முல்லைத்தீவில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures