Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாக்குறுதிகளை மீறும் அரசு! சஜித்

January 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள்! | வஜிர அபேவர்தன

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கு காணப்படுகின்றன. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா, திவுலப்பிட்டிய அமைப்பாளர் எட்வர்ட் குணசேகர அவர்கள் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு  தெரிவித்தார்.

பேச்சுக்கள் நன்றாக இருந்தாலும் செயல் பலவீனமாகவும் மெத்தன போக்கிலும் காணப்படுகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைந்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் இந்த அரசிடம் இல்லை.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் போது மாற்று வாழ்வாதார ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அவ்வாறான புதிய ஏற்பாடுகள் இந்த அரசிடம் இல்லை. பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அரிசி, தேங்காய்க்கு கூட தட்டுப்பாடு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் கோரா விட்டால் மின் கட்டணம் 20% ஆல் கூட குறைந்த பாடில்லை.

இறக்குமதி பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மின்சார கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்சார சபைக்கு அதிக இலாபம் கிடைத்தாலும் மக்களுக்கு அந்த இலாபம் கிடைத்தபாடில்லை. பொதுமக்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் 20% மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கூட்டுறவுச் சங்க தேர்தல்களின் மூலம் மக்களின் கருத்து புலப்படுகிறது. 

இன்று கூட்டுறவு சங்கத் தேர்தல்களின் மூலம் மக்களின் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்து  சுமையாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். உர மானியத்தை கூட முறையாக வழங்க முடியாத அரசு, பரிசோதனைகள் இன்றி 328 கொள்கலன்களை சிவப்பு அறிவிப்புடன் விடுவித்துள்ளன. 

மக்களுக்காக நாம் முன்நிற்போம்! 

அரச உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்து இருக்கின்றனர். தனியார் துறையிலும் அரச சேவையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். பொறுப்புள்ள  எதிர்க்கட்சியாக மக்களுக்காக என்றும் குரல் எழுப்புவோம் என அவர் மேலும் தெரிவித்தார். 

Previous Post

இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

Next Post

மாவை வைத்தியசாலையில் அனுமதி!

Next Post
மாவை வைத்தியசாலையில் அனுமதி!

மாவை வைத்தியசாலையில் அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures