வாக்காளர் பட்டியலில் பெயர்மாற்றுவதற்கான சிறப்பு முகாம் அந்தந்த மாவட்டங்களிற்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடைபெறும் குறித்த முகாம் இன்று காலை (சனிக்கிழமை) 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் தொகுதிகளுக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் குறித்த பணிகள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

