Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்களிக்க வந்த மக்களின் பேருந்துகள் மீது துப்பாக்கி பிரயோகம்

November 16, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பேருந்துகளில் வந்த புத்தளம் மக்கள் மீது துப்பாக்கிக் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள மன்னாரை சேர்ந்த வாக்காளர்கள், மன்னாரில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து நெச்சியகாம ஒயாமடு வீதியூடாக மன்னார் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணித்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. நேற்று (15) வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரையோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹீனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளத்தில் உள்ள மன்னார் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு புத்தளத்தில் இருந்து பேருந்துகள் மூலம் மன்னாரிற்கு வருகை தந்தனர்.

இதன் போது புத்தளத்திலிருந்து நெச்சியகாம ஒயாமடு வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கற்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இத்தாக்குதலில் எவ்வித உயிர் சோதங்களின்றி சாரதியின் சாதுரியத்தால் பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி வரும்போது பலதடைகள் ஏற்பட்டது.

எனினும் பேருந்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து மேலும் தொடராக பயணித்த ஏழு பேருந்துகளிற்கு பாரிய மரங்களைக் கொண்டு பயணத்தடைகள் ஏற்பாடுத்தப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடைகள் இடப்பட்ட மரங்களை பொலிசார் மக்களின் உதவியோடு அகற்றி மக்கள் பாதுகாப்பாக மன்னார் பிரதான வீதிக்கு அனுப்பட்டனர்

இச்சம்பவத்தில் சேதமாக்கப்பட்ட மூன்று பேருந்துகள் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டுக்கு தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டன.

அந்த மக்கள் பாதுகாப்பாக மன்னார் வந்துள்ளனர். 10 பேருந்துகளில் பயணித்த மக்களே அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். ஏனைய பேருந்துகளில் வந்த மக்கள் பாதுகாப்பாக வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் , புத்தளத்தில் வாழும் மன்னார் மக்களை வாக்களிக்க பேருந்தகளில் அழைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுஜன பெரமுனவினர் மன்னார் தேர்தல் அலுவலகத்திலும் முறைப்பாடு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வதந்திகளை நம்பி ஏமாறாது வாக்களிப்பை மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

Next Post

காலையிலேயே வாக்களித்த தமிழ் அரசுகட்சியின் 2 எம்.பிக்கள்!

Next Post

காலையிலேயே வாக்களித்த தமிழ் அரசுகட்சியின் 2 எம்.பிக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures