வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் நேற்று (ஜன 04) மாலை மரணமடைந்துள்ளார்.
இவ்விடயம் பற்றி தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த மாவில்வத்தை கண்டியைச் சேர்ந்த 62 வயதுடைய இ. சேகர் என்ற நபர் நேற்று புதன்கிழமை பிற்பகல் அதிக சளி காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணித்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.