Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வவுனியாவில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு | பெண் மீதும் தாக்குதல்

March 16, 2022
in News, Sri Lanka News
0
வவுனியாவில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு | பெண் மீதும் தாக்குதல்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் வேலைக்காக வெளியில் சென்றிருந்ததுடன், ஒரு பிள்ளை பாடசாலைக்கும், மற்றைய பெண் ஒருவர் உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண் பகல் 11 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து அறை ஒன்றுக்குள் சென்று சிறிது நேரத்தில் வீடு புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த அலுமாரி, சாமி அறை மற்றும் ஏனைய பகுதிகளில் சோதனை செய்ததுடன், குறித்த பெண் பிள்ளை அறையில் இருந்து வெளியில் வந்த போது அந்த பெண் மீது கதவு சட்டத்தினால் தாக்கிவிட்டு அப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றையும் அறுத்துச் சென்றுள்ளனர். இதன்போது 2 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண் அயலவர்களை அழைத்ததுடன், தமது பெற்றோருக்கும் தெரியப்படுத்தியிருந்தார். இது தொடர்பில் வவுனியா பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா உக்குளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பாடசாலையில் காதல் விவகாரம் | இரு மாணவர்கள் மீது கத்திக்குத்து | மாத்தளையில் சம்பவம்

Next Post

நாட்டில் ஒரே ஒரு கொரோனா மரணம் பதிவு

Next Post
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நாட்டில் ஒரே ஒரு கொரோனா மரணம் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures