Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வலி வடக்கு வசாவிளானில் மக்களின் காணியில் இராணுவ வைத்தியசாலை | தடுத்துநிறுத்த கோரிக்கை

May 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

வலிகாமம் வடக்கு வசாவிளன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை  அமைக்கப்பட்டு வருகிறது. எவ்வித அனுமதியும் இன்றி இந்த வைத்தியசாலை கட்டப்பட்டு  வருகிறது என வலிவடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ச.சஜிவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலி வடக்கு தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் பிரதேச சபைக்கூட்டத்தில்  கலந்துரையாடி அதனை நிறுத்த வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

 அதேபோல் வசாவிளான் பகுதியில் 245 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ வைத்தியசாலை கட்டப்பட்டு வருகின்றது. இதில் 8 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களின் காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கூறியிருந்தேன்  கடந்த ஒருவருடமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

பிரதேச சபையால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாது இருந்துள்ளது. தற்போது தையிட்டி விகாரை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்  அதேபோல் வசாவிளான் பகுதியில் அமைக்கப்படுகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

வலிவடக்கு  பிரதேசத்தை பொறுத்தவரையில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து சிறிது சிறிதாக விடுவிக்கப்படும் பகுதியாகவே காணப்படுகிறது. தற்போதும் பல பிரதேசங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது விடுக்கப்படும் என கூறப்பட்டுவந்தாலும் அது நடந்தபாடாக இல்லை.

 எனவே இனியாவது காணிகளை விடுவிக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் அனுமதியின்றியும்  பொதுமக்களின் காணிகளில் கட்டப்பட்டு வருகின்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் நிறுத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Previous Post

சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

Next Post

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

Next Post
இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures