Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வலி மிகுந்த நாள்!

December 26, 2017
in News
0

இலங்கைத்தீவு உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பாரியளவில் சேதங்களை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்று 13 வருடங்களாகின்றன.

இலங்கைத் தீவிலிருந்து சுமார் 1600 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சுமத்திரா மற்றும் அந்தமான் தீவுகளை அண்டியுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி இந்த சுனாமி பேரலைக்கு காரணமாக அமைந்தது.

மூன்று நாட்களாக அந்த கடற்பகுதியில் 70 இற்கும் அதிகமான பூமி அதிர்வுகள் பதிவாகி இருந்தன. இதில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இலங்கை நேரப்படி காலை 6.58 இற்கு பதிவாகி இருந்தது. ஒன்பது ரிச்டர் அளவில் பதிவாகிய அந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சுனாமி பேரலையால் இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் கூடுதலான சேதம் ஏற்பட்டது. அன்றையதினம் காலை 9.36 இற்கு கிழக்கு கடற்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் ஊடறுத்து வந்த சுனாமி பேரலை பருத்தித்துறையிலிருந்து கல்கிஸ்சை வரையான கரையோர பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் 13 மாவட்டங்கள் சுனாமி பேரலையால்பாதிக்கப்பட்டன. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கையில் உயிரிழந்தனர். நான்காயிரத்து 93 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

23 ஆயிரம் பேர் காயமடைந்தனர். சுமார் ஐந்து இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 63 ஆயிரத்து 447 வீடுகளும் 144 சுற்றுலா ஹோட்டல்களும் 396 மத ஸ்தலங்களும் 73 பாடசாலைகளும் ஒன்பது வைத்தியசாலைகளும் முழுமையான சேதமடைந்தன. மாத்தறை, தங்காலை, ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய நகரங்கள் முழுமையாக கடல் நீரினால் மூழ்கடிக்கப்பட்டன. கரையோர ரயில் பாதையும் நெடுஞ்சாலையும் கடுமையான சேதத்தை எதிர்கொண்டன.

தாயகத்தின் முல்லைத்தீவு, மட்டக்களப்பு பகுதிகளில் அதிகளவான உயிர்கள் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பணத்தை மிச்சப்படுத்த அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்

Next Post

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். வடமராட்சி

Next Post

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். வடமராட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures