Saturday, May 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வரி அறவீடுகளில் திருத்தம்

June 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வரி அறவீடுகளில் திருத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெறுமதி சேர் வரியை 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கவும்,தொலைத்தொடர்பு வரியை 11.25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்து.

அத்துடன் தனிநபர் வருமான வரிச்சலுகையை 3 மில்லியன் ரூபாவிலிருந்து 1.8 மில்லியன் ரூபா வரை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார உறுதிப்பாட்டிற்காக வருமானத்தை அதிகரிக்க வரி அறவீடுகள் திருத்தம் | Virakesari.lk

வரி அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் பாராளுமன்றத்தின் அங்கிகாரத்தை தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதன் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

வரி அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2019ஆம் ஆண்டுக்கு பிறகு அரசாங்கம் குறைவரி விதிப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது. இதில் மதிப்பு கூட்டு வரி,தனிப்பட்ட வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி ஆகியவற்றின் வரி விகிதங்களை குறைத்தல் மற்றும் மதிப்பு கூட்டு வரி,தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரி தளங்களை குறைத்தல் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தது.

விவசாயம் மற்றும் தகவல் தொழினுல்நுட்பத்திற்கான வரி விலக்குகள் மற்றும் செயற்படுத்தப்பட்ட சேவைகள்,வரி விலக்குகள் மற்றும் வரி விதிமுறைகள் போன்ற ஏராளமான வரிச்சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் வருடமொன்றுக்கு சுமார் 600 பில்லியன்-800 பில்லியன் வரி வருவாய் நட்டத்தை திறைச்சேரி எதிர்க்கொள்ள நேரிட்டது.

எனவே இந்த சீர்த்திருத்தங்கள் 2020 மற்றும் 2021 காலப்பகுதியில் கொவிட் -19 தொற்று பரவல் மற்றும் தொடர்புடைய வளர்ச்சிகள் காரணமாக அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழிவகுத்த திட்டங்களாக கருதப்படுகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2019ஆம் ஆண்டு 12.7 சதவீதத்திலிருந்து 2020ஆம் ஆண்டு 9.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது.2021ஆம் ஆண்டு 8.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது வளர்ந்து வரும் சந்தை மற்றும் பொருளாதாரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருவாய் வீதமான 25 சதவீதத்தை காட்டிலும் குறைவானதாகும்.

குறை வரி விதிப்பு, அரச வருமான திரட்டலில் கொவிட் பெருந்தொற்று தாக்கம்,தொற்று நோய் நிவாரண நடவடிக்கைகளுடன் வரவு செலவு திட்ட பற்றாக்குறை 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.1 சதவீதமாகவும்,2021ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2சதவீதமாகவும்,2019ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாகவும் சடுதியாக குறைவடைந்தது.

நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதார வளர்ச்சியி;ல் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையின் பொருளாதாரம் முன்னோடியில்லாத பணவீக்க அழுத்தங்கள்,தொடர்ந்து பாரிய நிதி மற்றும் இருப்பு நிதி தேவைகள் ,பெரிய கடன் அதிகரிப்பு மற்றும் முக்கியமான குறைந்த அளவிலான இருப்புக்கள் மற்றும் மாற்று விகிதத்தில் அழுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட கூடியதாக உள்ளது.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் மற்றும் கடன் மதிப்பீடு குறைதல்,வணிகம் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை இழப்பு ஆகிய காரணிகளினால் பொருளாதாரம் மோசமாக பாதிப்படைய கூடும்.

அத்துடன் சர்வதேச சந்தைக்கான அணுகல் இழப்பு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ,அந்நிய செலாவணி அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை என்பன அரசாங்க வரவு –செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதில் கணிசமான சிக்கல் தன்மையை தோற்றுவித்துள்ளன.

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கான உள்நாட்டு ஆதாரங்களில் பெரும்பான்மையானது வங்கி மூலங்களிலிருந்து குறிப்பாக மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்டது.

உள்நாட்டு வங்கி அல்லாத ஆதாரங்களில் போதுமான அளவு நிகர் நிதி கிடைக்காததால் மத்திய வங்கியின் தொடர்ச்சியான கணிசமான அளவு நிதியளிப்பு பொருளாதாரத்தை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

வட்டி,சம்பளம்.ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் போன்றவற்றில் கணிசமான பகுதி அரசாங்கத்தின் செலவினங்களை மேற்கொள்வதற்கு பொது திறைச்சேரி மத்திய வங்கியின் நிதியுதவியை பெற வேண்டிய நெருக்கடியான தன்மை தோற்றம் பெற்றுள்ளது.

ஆகவே வருவாயை மேம்படுத்துதல் மற்றும் 2022ஆம் ஆண்டு அதற்கு அப்பால் நாட்டின் நடுத்தர மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை மேம்படுத்தும் வகையில் பொருளாதார ஸ்தீரத்தன்மையை உறுதி செய்வதற்காக செலவினங்களை குறைனக்ன வலுவான நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தை செயற்படுத்துவது அவசியமாகும்.

Previous Post

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே அவசியம்

Next Post

உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காது பயிர்செய்கையில் ஈடுபடுங்கள்

Next Post
உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காது பயிர்செய்கையில் ஈடுபடுங்கள்

உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காது பயிர்செய்கையில் ஈடுபடுங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

May 10, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி

May 10, 2025

Recent News

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

May 10, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி

May 10, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures