பங்களாதேஷில் 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் கலிதா ஜியா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

