காடுகளை, வன விலங்குகளை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரியமான காணிகளை அபகரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என நாடா ளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சிறிநேசன் சபையில் தெரிவித்துள்ளார்.
வனவிலங்குள் மற்றும் காடுகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளதாக கூறிய அவர் , வடக்கு,கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களின் காணிகளை இவ்வாறு அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பில் கிரான், ஏறாவூர்பற்று, வவுணதீவுபற்று, வெல்லாவளி மற்றும் வாகரை பிரதேச செயலகங்களில் கால்நடை வளர்ப்பு பரவலாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் பண்ணையாளர்கள் கால்நடைகளை வளர்ப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் இவை பாணப்படுகின்றன.
அங்கு எவ்வித தடைகளுமின்றி இவர்கள் கால்நடைகளை வளர்த்துவந்த சூழலில் தற்போது சட்டவிரோத குடியேற்றங்கள் இங்கு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

