Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு

June 2, 2018
in News, Politics, World
0

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அணுஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்திவந்த வடகொரியா மீது, உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்திருந்தன. கொரியப் போருக்குப் பின்னர் தென்கொரியாவுடன் மோதல் போக்கைக் கடந்துவந்த வடகொரியா, அந்நாட்டை மிரட்டும் தொனியில் அடிக்கடி அணுஆயுதச் சோதனையில் ஈடுபட்டுவந்தது. இதனால், உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடகொரியா, சமீபத்தில் சமாதானப் பேச்சுக்கு இறங்கிவந்தது. முதல் படியாக, தென்கொரிய அதிபர் மூன் ஜியே இன்-னை அந்நாட்டு எல்லைக்கே சென்று கிம் ஜாங் உன் சந்தித்தது உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.

அதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்திக்கவும் கிம் விருப்பம் தெரிவித்திருந்தார். கிம் ஜாங் உன்னின் அழைப்பை ஏற்று அவரை சந்திக்க ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பு, வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. `உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக அந்தச் சந்திப்பை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம்’ என அந்தச் சந்திப்புகுறித்து ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.சில நாள்களுக்குப் பின் “வடகொரியாவின் சார்பில் வந்த சமீபகால அறிக்கையில், விரோதப்போக்கும் கோபமும் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் சந்திப்பது நன்றாக இருக்காது’’எனக் கூறி, சந்திப்பு ரத்துசெய்யப்பட்டதாக ட்ரம்ப் திடீரென அறிவித்தார்.

இந்நிலையில், வடகொரிய அதிபரின் சிறப்புப் பிரதிநிதி வெள்ளைமாளிகைக்குச் சென்று, அங்கு ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதற்குப் பின்னர்தான், கிம் ஜாங் உன்-னைச் சந்திப்பதாக உறுதியளித்துள்ளார் ட்ரம்ப். இந்தச் சந்திப்பு, திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கபூரில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு, அணுஆயுத தயாரிப்புத் திட்டங்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருமா என உறுதியாகக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள இரு பெண்கள்

Next Post

30 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்!

Next Post

30 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures