உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டைச் சேர்ந்த 25 வயதான ஹாபிழ் ஹம்சா
டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தொழில் செய்து வந்தார் .
டெல்லி தாக்குதல் நடந்து 2 நாட்களுக்குப் பிறகு தனது கடையை உடைத்திருப்பார்களோ என்ற பதட்டத்துடன் கடையைப் பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஹம்சாவைக் காணவில்லை என்று அவரது உறவினர்கள் பதட்டத்துடன் தேடினர்.
கடந்த வியாழக்கிழமை அவரது உடல் டீல்பூரின் நாலா பகுதியில் உள்ள ஒரு வடிகாலில் இருந்து மீட்கப்பட்டது.
ஹம்ஸாவின் உடல் மீட்கப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஹம்சாவின் உடலை உறவினர்கள் மீரட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.
விரைவில் திருமணம் செய்ய இருந்தார் ஹம்சா என்பது குறிப்பிடத்தக்கது .
