Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமாநிலங்களில் ரயில்சேவை தொடர்ந்து பாதிப்பு

January 16, 2018
in News, Uncategorized, World
0

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களின் பல பகுதிகளில் ரயில் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடர் பனியால், போக்குவரத்து சேவை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிக்கலானதாக மாறிவிடுகிறது. குறிப்பாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடந்த சில நாட்களாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லிக்கு வரவேண்டிய 39 ரயில்கள், தாமதமாக வந்துசேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், 4 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது மற்றும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவால் பீகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை எட்டியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தால் ஏரியின் பல பகுதிகள் உறைந்து பனிக்கட்டியாகக் காட்சியளிக்கிறது.

Previous Post

ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் சொல்லும் 114 வயது முதியவர்

Next Post

மலையாள நடிகர் சுரேஷ் கோபி கைது!

Next Post
மலையாள நடிகர் சுரேஷ் கோபி கைது!

மலையாள நடிகர் சுரேஷ் கோபி கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures