Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

வடக்கு நா.உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரம் கொள்வனவு செய்ய வேண்டும்!

May 28, 2021
in Sri Lanka News
0

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்க முன்வரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். சோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சமூக மட்டத்தில் தொற்றாளர்களை இனம் காண்பதற்கு சோதனைகளை அதிகரிக்கவேண்டும். ஒரே நாளில் அதிகளவான பி.சி.ஆர். மாதிரிகளைப் பெற்றுக் கொண்டாலும் அதனைச் சோதனைக்கு உட்படுத்துவதற்கு இரண்டு ஆய்வு கூடங்களே வடக்கில் உள்ளன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உள்ள இயந்திரம் ஊடாக ஆகக் கூடியது ஆயிரம் மாதிரிகளையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் உள்ள இயந்திரம் ஊடாக ஆகக் கூடியது 300 மாதிரிகளையுமே ஒரே நாளில் சோதனைக்கு உட்படுத்த முடியும்.

வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்துக்கு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுத்தும் இதுவரை அது கிடைக்கப்பெறவில்லை.

பி.சி.ஆர். இயந்திரம் ஒன்றின் ஆகக் கூடிய பெறுமதி 45 லட்சம் ரூபா.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரனும், ஈ.பி.டி.பி. சார்பில் டக்ளஸ் தேவானந்தாவும் (அமைச்சர்), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் இ.அங்கஜனும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோதராதலிங்கம் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் காதர் மஸ்தானும், ஈ.பி.டி.பி. சார்பில் கு.தீலிபனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிஷாத் பதியுதீனும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் அவர்களது சம்பளம், அமர்வுகளில் பங்கேற்பதற்கான கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட இதர கொடுப்பனவுகள் மூலம் ஆகக் குறைந்தது மாதாந்தம் 2 இலட்சம் ரூபா வரையில் பெற்றுக்கொள்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் 3 இலட்சத்து 47 ரூபாவை ஒதுக்கினால் வடக்கு மாகாணத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ஒரு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய முடியும்.

எமது வாக்குகளால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், எங்களின் பாதுகாப்புக்காக இதனைக் கொள்வனவு செய்து வழங்கவேண்டும் என்று வடக்கு மக்கள் அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Previous Post

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணையோம்: அமெரிக்கா உறுதி

Next Post

டோக்கியோ ஒலிம்பிக் ரத்துக்கு ஆதரவு காட்டும் ஆசாஹி ஷிம்பன் செய்தித்தாள்

Next Post

டோக்கியோ ஒலிம்பிக் ரத்துக்கு ஆதரவு காட்டும் ஆசாஹி ஷிம்பன் செய்தித்தாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026

Recent News

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures