Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் இராபக்சவின் சகோதரர்கள் – சந்திரசேகரம்

May 3, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் இராபக்சவின் சகோதரர்கள் – சந்திரசேகரம்

வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்  என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.  

யாழ். வேலணை பகுதியில் வெள்ளிக்கிழமை (02)  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கிலும், தெற்கிலும் மக்களை பிரித்தாளும் இனவாதத்தை தோற்கடித்து, முன்னோக்கி செல்ல தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்க வேண்டும். 

இன ஒற்றுமையை ஏற்படுத்தினால்தான் இந்நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். எனவேதான் இது விடயத்துக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி செயற்பட்டு வருகின்றோம்.

இந்நிலையில் வாக்கு அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் அரசியலை ராஜபக்ச அணி தெற்கில் முன்னெடுத்து வருகின்றது. கடந்த காலங்களில் மக்கள் பாடம் புகட்டியும் அவர்கள் திருந்துவதாக இல்லை.  

அதேபோல வடக்கிலுள்ள சிலரும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி மக்களை பிரித்தாளும் பிரச்சாரத்தை செய்கின்றனர். 

வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்காக எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பல இருக்க, எதுவுமே நடக்கவில்லை என்ற தொனியில் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் வடக்கிலும், தெற்கிலும் இனவாத அரசியலுக்கு மக்கள் இனியும் இடமளிக்கமாட்டார்கள் என்பது உறுதி. அதற்கான சிறந்த செய்தியை மே 6 ஆம் திகதியும் வழங்க வேண்டும். வடக்கில் இருந்து இந்த செய்தி தெளிவாக செல்ல வேண்டும்.  

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இதுவரை காலமும் தீர்க்கபடாத தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும். 

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இந்த விடயம் தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர் என்றார். 

Previous Post

புனித பேதுருவானவர் வாபஸ் பெற்றதால் அரை இறுதிக்கு ஸாஹிரா நேரடித் தகுதி

Next Post

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Next Post
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures