வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா இன்றைய தினம் திங்கட்கிழமை (16) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன்போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார்.
மேலும், அவ்வேளை, யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர், யாழ். மாநகர சபையின் முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.