வட மாகாணத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாணத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேஸநாதன் தெரிவித்தார்.
அதற்கமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“வடக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை பொலிஸாரிடம் தெரிவிப்பதற்கு மொழி பெரும் பிரச்சிணையாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக சட்டத்தை அமுல்படுத்துவதில் பொலிஸ் திணைக்களம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
இதற்கு தீர்வு வழங்கும் முகமாகவே இம்முறை வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.