நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளாரெனவும் கூறப்படுகின்றது.
போலி காணி உறுதிப்பத்திரங்களைக் கொண்டு மன்னாரில் காணிகளை அபகரித்ததாக ரிசாட் சகோதரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் , பெப்ரவரி 6 ஆம்நாள் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
மன்னார் பிரதேசத்திலுள்ள காணிக்கு போலி உறுதி பத்திரம் தயாரித்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதின், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

