Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

November 19, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்ற கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் ‘காந்தாரா அத்தியாயம் 1’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘காந்தாரா அத்தியாயம் 1 ‘ எனும் திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஓக்டோபர் மாதம் 2-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர் . 

கொங்கனி எனும் மொழியை பேசும் மக்களின் வாழ்வியலை தழுவி தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.‌

2022 ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியான வெற்றியை பெற்றதுடன் தேசிய விருதையும் வென்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி நடிப்பில் தயாராகும் இந்த ‘காந்தாரா :அத்தியாயம் 1’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி – கேரள மாநிலத்தின் பாரம்பரியமிக்க தற்காப்பு கலையான களரிபயாட்டு எனும் கலையில் பயிற்சி பெற்று நடித்து வருவதால்  படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.‌

Previous Post

டிசம்பரில் அனுரகுமார இந்தியா விஜயம்

Next Post

தமிழர்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் | உதய கம்மன்பில

Next Post
நாட்டு மக்கள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் | உதய கம்மன்பில

தமிழர்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் | உதய கம்மன்பில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures