Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராஜபக்ஷ அரசாங்கத்தின் திருடர்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை | அகிலவிராஜ்

May 14, 2022
in News, Sri Lanka News
0
ராஜபக்ஷ அரசாங்கத்தின் திருடர்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை | அகிலவிராஜ்

ராஜபக்ஷ் அரசாங்கத்தின் திருடர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

Akila Viraj resigns as UNP General Secretary | Daily News

அதில் எந்த மாற்றமும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பி்ட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்ககையில்,

ராஜபக்ஷ்வினரின் திருட்டு நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில்  நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவந்தது என்ற குற்றச்சாட்டு இருந்தது.

என்றாலும் யாரையும் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. திருடர்கள் மற்றும் மோசடிகாரர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலேயே நடவடிக்கைகளை எடுத்தோம்.

தற்போதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்றிருக்கின்றார். அதனால் திருடர்களை பாதுகாக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

திருடர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தும் வேலைத்திட்டத்தை நாங்கள் செய்வோம். இதுதொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன.

அதுதொடர்பாகவும் ஆராய்ந்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.  அதன் பொறுப்புகள் அவர்களுக்கும் வழங்கும் வகையில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

அத்துடன் மோசடி, திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தாலும் அனைவருக்கும் ஒருமாதிரியே நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில்போன்று அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பவரை பாதுகாக்கவும் எதிராக இருப்பவர்களின் மோசடிகளை மாத்திரம் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முடியாது.

மக்களுக்கு இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரியும். என்றாலும் கடந்த அரசாங்கத்தில் பலருக்கு நீதிமன்றங்களில் விடுவித்து விடுதலை செய்திருக்கின்றது.

அவ்வாறான தீர்ப்புக்களை மீண்டும் சவாலுக்கு உட்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை என்றார்.

 

Previous Post

கிராமத்திற்கு மின்சாரத்தை துண்டித்துவிட்டு காதலியை சந்தித்த எலக்ட்ரீசியன் | சுவாரசிய சம்பவம்

Next Post

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 3 ஆம் நாள் நவாலியில் அனுஷ்டிப்பு

Next Post
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 3 ஆம் நாள் நவாலியில் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 3 ஆம் நாள் நவாலியில் அனுஷ்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures