Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயில் கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கைது !

March 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரயிலில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு மீட்பு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிப்பறையில் பிளாஸ்டிக் கூடையொன்றுக்குள் வைத்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் என அடையாளங் காணப்பட்ட இளைஞர் ஒருவரும் , யுவதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் ரயிலின் கழிப்பறையில் சிசுவொன்று காணப்படுவதாக பயணிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய , கோட்டை புகையிரத நிலைய பாதுகாப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசுவை மீட்டுள்ளனர்.

பொலிஸாரால் மீட்க்கப்பட்ட சிசு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இதன் போது சிசுவை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி வைத்தியர்கள் சிசு தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் , பிறந்து ஒரு வாரமாக இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு சிசுவை கைவிட்டுச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையிலேயே இன்று சனிக்கிழமை 26 வயதான இளைஞன் ஒருவரும் , 25 வயதான யுவதியொருவரும் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் பிரிவுகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தெஹிவளை பிரதேசத்தில் பணி புரிந்து வந்துள்ளார். திருமணமாகாத நிலையில் குறித்த யுவதி கருவுற்றிருந்ததை அறிந்த நபர் அவரை கொழும்பிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார். 

இந்நிலையிலேயே கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் யுவதி கொஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

வடக்கின் சமரில் சென். ஜோன்ஸை 9 விக்கெட்களால் வீழ்த்தி 29 ஆவது வெற்றியை சுவைத்தது யாழ். மத்திய கல்லூரி

Next Post

கொன்றால் பாவம் – விமர்சனம்

Next Post
கொன்றால் பாவம் – விமர்சனம்

கொன்றால் பாவம் - விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures