Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில் ஊழியர்களின் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு

June 28, 2019
in News, Politics, World
0

ரயில் ஊழியர்களின் பிரச்சினையை இரண்டு வாரங்களில் தீர்ப்பதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழியர்கள் சேவைக்கு வராவிட்டால் ஓய்வூதியர்களை நியமித்து சேவையைத் தொடர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு இல்லாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்தேனும் ரயில் சேவைகள் இடம்பெற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் ஊழியர்கள் செயற்பட்டால் அவர்களுக்கெதிராக கடும் தீர்மானம் எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் குறிப்பிடுகையில், ரயில்வே ஊழியர்கள் சிலரது சம்பளத்தில் குறைபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் . எனினும் சிலர் 2 அல்லது 3 இலட்சம் ரூபாய் என அதிகரித்த சம்பளம் பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஆராய்ந்து முறைமை ஒன்றை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காகவே நாம் கால அவகாசம் கோரியிருந்தோம்.

எமது கோரிக்கைக்கு செவிமடுக்காமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களானால் அதை எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் நிலையில், 5 இலட்சத்து 18 ஆயிரத்து 720 அரச ஊழியர்களின் சம்பளங்களிலும் முரண்பாடு ஏற்படும்.

அவ்வாறு ஏற்பட்டால் அரசாங்கம் பெரும் நெருக்கடி ஒன்றை எதிர்கொள்ள நேரிடும். எனவே அதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.

அதனூடாக ஆராயப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அதற்கான முறைமை ஒன்றை ஏற்படுத்தி முழுமையாக பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

Previous Post

ஐ.எஸ். முகாமில் வெளிநாட்டுத் தயாரிப்பு வாள்கள், ஆயுதங்கள் கண்டெடுப்பு!

Next Post

மரண தண்டனையால் மட்டும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது – ஜே.வி.பி

Next Post

மரண தண்டனையால் மட்டும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது – ஜே.வி.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures