பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் சிங்கப்பூருக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாநாட்டில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.