Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது | வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

May 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது | வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி கடல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

வடமராட்சி கடல் தொழிலாளர்கள் இன்று(22) நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது : வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தங்களுக்கு கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னரும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை என்றும் இதனால் தாம் கடற்றொழிலிற்கு செல்ல முடியாது தமது வாழ்வாதாரத்திற்க்காக பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு நாளாந்தம் குறைந்தபட்சம் 40 லிட்டர் எரிபொருள் தேவை என்றும், ஆனாலும் கடந்த காலங்களில் வாரத்திற்கு மட்டும் 40 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், அதுவும் கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவில்லை என்றும் தமது கடற்தொழிலில் படகு மற்றும் உபகரணங்களை கரையிலே ஏற்றிவைத்துவிட்டு தாம் தூங்கிக் கொண்டிருப்பதாக கடல் தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.  

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது : வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

வாழ்வாதாரத்திற்கு நாளாந்தம் மிகப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் தமது தமிழ் அரசியல்வாதிகளும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் அவர்களது இல்லங்களை முற்றுகையிட்டு “கோட்டா கோ கம” போன்று செயற்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

தற்போது ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் விட்டதாகவும், ரணில் ஒரு குள்ள நரியன் என்றும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

Previous Post

கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை.

Next Post

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கிய நபர்!

Next Post
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கிய நபர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures