Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“யாஹூ மெசன்ஜர்” நிறுத்தம்

July 19, 2018
in News, Politics, World
0

உலகின் முதல் குறுந்தகவல் சேவையான யாஹூ மெசன்ஜர் தனது அருமையான நினைவுகளில் இருந்து விடைப்பெறறது. யாஹூ மெசன்ஜரை பயன்படுத்திய பலருக்கு இது அதிர்ச்சியை அளிக்க கூடியதாக இருக்கலாம். வாட்சப், பேஸ்புக், மெசன்ஞர், டிவிட்டர், இன்ஸ்டகிராம் என்று பல சாட்(chat) செயலிகளின் ஆதிக்கத்தினால் யாஹூ மெசன்ஜர் சேவையை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் முதல் குறுந்தகவல் சேவையை ஓத் இன்க் நிறுவனம் வழங்கி வந்தது. இணையம் மூலம் தகவல் பரிமாற்றங்களை செய்யும் நோக்கில் யாஹூ மெசன்ஜரை ஓத் இன்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில் யாஹூ மெசன்ஜர் வாடிக்கையாளர்கள் இதயத்தில் நீங்காத பல நினைவுகளை கொண்டுள்ளது.

யாஹூ மெசன்ஜர் சேவையை நிறுத்த முதலில் ஓத் இன்க் நிறுவனம் முடிவு செய்யவில்லை. எனினும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக யாஹூ மெசன்ஜர் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டதுடன், அதல் செயல்பாட்டை நிறுத்தும் நிலையை அடைந்துள்ளது. கடந்த மாதம் யாஹூ மெசன்ஜர் சேவையை ஜூலை 17ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக ஓத் இன்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி நேற்றுமுதல் அதன் சேவை நிறுத்தப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓத் நிறுவனம் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெசன்ஜர் சேவையை நிறுத்தியது. தகவல் பரிமாற்ற வழிமுறைகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

கடந்த மாதம் யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியை சோதனை செய்து வந்தது. அந்த வகையில் இந்த செயலி யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசன்ஜர் செயலியின் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு டவுன்லோடு செய்ய முடியும் என அதன் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாஹூ மெசன்ஜர் செயலி மார்ச் 9ம் தேதி 1998 வது ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 21, 1999-ம் ஆண்டு ரீபிரான்டிங் செய்யப்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை சேவைகள் புரிந்த யாஹூ மெசன்ஜர் ஆப் ஜூலை 17, 2018-ல் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

Previous Post

கடலில் எரிமலை வெடித்து 23 பேர் படுகாயம்

Next Post

அதிக எடையால் உடைந்த மும்பை ரெயில்வே பாலம்

Next Post

அதிக எடையால் உடைந்த மும்பை ரெயில்வே பாலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures