Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை

November 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் நினைவாக வருடந்தோறும் நினைவுப் பேருரை இடம்பெற்று வருவது அப்பல்கலைக்கழகத்தின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இந்த வருடத்திற்கான நினைவுப் பேருரை எதிர்வரும் 17-11-2022 அன்று வியாழக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் புகழ்பூத்த கணிதவியல் அறிஞருமான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்களின் தலைமையில் நிகழ்ந்த மேற்படி நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆய்வாளரும் கவிஞரும் விமர்சகருமாகிய கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

காலனிய கால இலங்கைத் தமிழ்ச் சமூகம் தொடர்பான முக்கியமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ள அவர், “நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்” எனும் பொருளில் தமது பேருரையை நிகழ்த்தினார். அரங்கு நிறைந்த பார்வையாளருடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கலைப்பீடாதிபதியின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நினைவுப் பேருரை அழகிய நூலாகவும் வழங்கப்பட்டது.

Previous Post

அமைச்சர்களுக்கு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

Next Post

விடுதலைப்புலிகளின் வழியில் எதிர்க்கட்சியினர்: பிரசன்ன குற்றச்சாட்டு

Next Post
69 இலட்ச மக்களின் ஆணை பொதுஜன பெரமுன அரசுக்கு இன்று இல்லை | பிரசன்ன ரணதுங்க

விடுதலைப்புலிகளின் வழியில் எதிர்க்கட்சியினர்: பிரசன்ன குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures