Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தை காப்பாற்றிய சுகாதாரத்துறை!

April 15, 2020
in News, Politics, World
0

மாகாணப் பணிப்பாளர் மதகுருவிற்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதே கணம் தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று  யாழ்ப்பாணத்தில் 15க்குட்பட்ட தொற்றாளர்களுடன் கொரொனாவை கட்டுப்படுத்தியுள்ளார்.
இவரது தலைமையில் இன்று  உண்மையில் நாம்(சுகாதாரத்துறை) அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என  பெருமை கொள்ள கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

சுகாதார வைத்திய அதிகாரிகள் ,பொது சுகாதார பரிசோதகர்களுடன் சேர்ந்து  தொடர்புகளை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும் இத்தொடர்புகளை தனிமைப்படுத்தியும்  ஊரடங்கு உத்தரவை நீட்டியதுமே இதற்கு காரணமாகும்.

யாழ்  சமூகம் இன்று பாரிய சேதத்தைத் தடுக்க இவை பங்களித்தன என்றால் மிகையாகாது.ஆயினும் இன்று தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்த வேண்டும்..

அவர்களுக்கும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்க பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.மேலும் மதகுருவுடன் நெருங்கி பழகிய அனைவருக்கும் மீள பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் கூறியபடி மூன்று தடவைகளாவது செய்ய வேண்டும். முதல் தொடர்புடையவர்களை மட்டுமல்ல இரண்டாம்,மூன்றாம் தொடர்புடையவர்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்துவது சம்பந்தமாக மாகாண பணிப்பாளர் தனது ஆளணியினருடன் மீளாய்வு செய்தல் வேண்டும்.

பாடசாலைகள்,பல்கலைக்கழகம் மீள் ஆரம்பிக்கும் திகதியையும் மீளாய்வு செய்தல் வேண்டும்.12நாட்களின் பின்னர் இன்று தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்கு காரணம் நாங்கள் அதிகளவிலான பரிசோதனைகளை செய்யாமலும், பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களை மீள பரிசோதிக்காமையுமே காரணமாகும். பலாலியில் இருந்த 14 பேருக்கும் இன்று 12 நாட்களின் பின்னரே இப்பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதனால் வைத்தியசாலைகளில் மீண்டும் அவசியமற்ற சேவைகளை ஆரம்பிக்கும் போது உள்ள ஆபத்துக்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.ஆகையினால் ஒரு நாளைக்கு செய்கின்ற பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்தல் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும்.

Previous Post

கொரோனாவால் உலக உயிரிழப்புகள் அதிகம் – இலங்கையில் உயிரிழப்புகள் குறைந்தன

Next Post

இத்தாலி, பிரான்சில் குறைந்த கொரோனா பலி

Next Post

இத்தாலி, பிரான்சில் குறைந்த கொரோனா பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures