Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ்ப்பாணத்தை கலக்கிய திருட்டு கும்பல் சிக்கியது!

May 13, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட திருட்டு கும்பல் வளைத்துப்பிடிக்கப்பட்டுள்ளது.

அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண் நகைகளும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களின் பதிவான திருட்டு முறைப்பாடுகளுக்கு அமைவாக அவற்றுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழான சிறப்பு குற்றத் தடுப்பினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீதிமன்றப் பிடியாணைகளைக் கொண்டு தலைமறைவாகியோரைத் தேடி பொலிஸார் வலைவீசினர். அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்துக்குமான வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நால்வரைக் கைது செய்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிடப்பட்ட நகைகள் 33 பவுண் மீட்கப்பட்டன. அத்துடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் சில நகைகள் மற்றும் பொருள்கள் விற்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

அத்துடன் சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களினால் பிறப்பிக்கப்பட்ட 21 பிடியாணைகளும் பொலிஸாரால் நிறைவேற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் ஆறு பேரும் சான்றுப்பொருள்களுடன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்.

Previous Post

கனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரிய தமிழர்கள்: குழப்பிய சிங்களவர்கள்!

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்: ஐந்துபேர் மட்டும் கலந்து கொண்டனர்!

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்: ஐந்துபேர் மட்டும் கலந்து கொண்டனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures