Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்த இருவர் கைது

July 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

வெளிநாட்டுக்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நபரொருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது என பொலிஸாரினால் கண்டறியப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். 

அதன்படி, போலி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த நபரை புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தபோது, அந்த நபர், தனக்கு சமூக வலைத்தளமொன்றின் ஊடாக போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கியவர்களோடு தொடர்புகொள்ள கிடைத்தது எனவும், அவர்கள் போலியான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தன்னிடம் அறவிட்டார்கள் எனவும், அவர்கள் தனது வீட்டுக்கு வாகனமொன்றில் வந்து கைரேகை மற்றும் பிற ஆவணங்களை பெற்றுச் சென்றனர் எனவும் தெரிவித்துள்ளார். 

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை தொடர்ந்த பொலிஸார், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளனர்.

அதனையடுத்து, கைதான இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில், சந்தேக நபர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிப்பதற்காக வைத்திருந்த உபகரணங்களை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் தொடர்பிலும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

Previous Post

இன்றைய வானிலை

Next Post

வட்டி வீதத்தை குறைக்க மத்திய வங்கி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் | ஹர்ஷ டி சில்வா

Next Post
பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாதகத் தன்மை சிங்கள மக்களுக்குப் புரியாது | ஹர்ஷடி சில்வா

வட்டி வீதத்தை குறைக்க மத்திய வங்கி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் | ஹர்ஷ டி சில்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures