தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம் யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம்-பாசையூர் பகுதியில் இந்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
பாசையூர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில், பாசையூர் கடற்கரை முன்றலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு அருகே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதன்போது, பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள், ஆடைகள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பாசையூர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் உறுப்பினர்கள், உதவித்திட்டப் பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

