Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரிக்கை

June 29, 2020
in News, Politics, World
0

இலங்கை பிரதானி ஒருவர் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார்.

தேசிய உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான் சுரேஷ் சலேவே இவ்வாறு, சட்டத்தரணி ஒருவர் ஊடாக நக்ஷ்டை ஈடுகோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த நட்ட ஈட்டை செலுத்தாவிடின் 14 நாட்களில் யஸ்மின் சூக்காவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக குறிப்பிட்டே, சட்டத்தரணி பஹன் வீரசிங்க ஊடாக அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் டி.எம்.எல். கூரியர் சேவை ஊடாக, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள யஸ்மின் சூகாவின் முகவரிக்கும் அவரது அலுவலக தலைமையகத்தின் முகவரிக்கும் அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த மே 22 ஆம் திகதி, தேசிய உளவுத் துறை பிரதானியான சுரேஷ் சலே மற்றும் மேலும் நான்கு இரானுவத்தினர் பிரிகேடியர் தரத்தில் இருந்து மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டனர்.

அது தொடர்பில் கடந்த ஜூன் முதலாம் திகதி விஷேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த யஸ்மின் சூக்கா,

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்படும் தற்போது தென் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் வரதராஜா துறைராஜன் என்பவரை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுரேஷ் சலே பொறுப்புக் கூற வேண்டியவர் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவரும் மேஜர் ஜெனரால் சுரேஷ் சலேவின் குழுவில் சேவையாற்றியதாகவும் சுட்டிக்காட்டிய ஜஸ்மின் சூக்கா, சுரேஷ் சலே மேஜர் ஜெனரால் பதவி உயர்த்தப்பட்டமையை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் யஸ்மின் சூகா கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி நட்ட ஈடு கோரி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இதேவேளை சர்வதேச அமைப்பொன்றின் பிரதானி ஒருவருக்கு எதிராக, இலங்கையில் இராணுவ சேவையில் இருக்கும் அதிகாரி ஒருவர், நட்ட ஈடு கோரும் சட்ட ரீதியிலான கடிதம் ஒன்றினை அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல்

Next Post

எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்தி பரவிவிட்டது-எஸ்.ஜானகி

Next Post

எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்தி பரவிவிட்டது-எஸ்.ஜானகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures