மத்திய பிரதேச மாநில கவர்னராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென்படேல் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு போபால் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
குஜராத் மாநில கவர்னராக இருக்கும் ஓம்பிரகாஷ் கோஹ்லி மத்திய பிரதேச மாநில பொறுப்பு கவர்னராகவும் பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலத்துக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது.
இதற்கு முன்னதாக அங்கு முழு நேர கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென்படேல் ம. . பி. கவர்னராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று கவர்னர் பொறுப்பை ஏற்றுக் ெகாள்வார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆனந்திபென்படேல் இன்று கவர்னராக பொறுபேற்றுக் கொண்டார். தலைநகர் போபாலில் ராஜ்பவனில் நடந்த எளிமையான விழாவில், மத்தியபிரதேச மாநில தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
விழாவில் மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.