Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மொத்த துடுப்பாட்ட வீரர்கள் கைவிட்டாலும்: மும்பை அணியை மீட்ட பாண்ட்யா

May 22, 2017
in News, Sports
0
மொத்த துடுப்பாட்ட வீரர்கள் கைவிட்டாலும்: மும்பை அணியை மீட்ட பாண்ட்யா

ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மற்றோரு வீரர் கருணல் பாண்ட்யா.

இப்போட்டியில் மும்பை அணியின் துடுப்பாட்டம் சொதப்பலாக இருந்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் புனே அணி இந்த எளிய இலக்கை எட்டி விடும் என்று எதிர்பார்த்த போது, மும்பை அணிக்கு அந்த இலக்கே வெற்றிக்கு காரணமாக இருந்தது.

ஆட்டத்தின் முதல் பந்து முதலே ஒரு விதபதற்றத்தோடு ஆடி வந்தது மும்பை. பார்த்திவ் பட்டேலை 3-வது ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார் உனட்கட்.

அதே ஓவரில் சிம்மன்சை ஒரு கையால் கேட்ச் பிடித்து அவரையும் வெளியேற்றினார்.

அம்படடி ராயுடு சிறப்பாக துடுப்பாட்டத்தை தொடங்கிய நிலையில் புனே அணியின் தலைவர் ஸ்மித் அவரை ரன் அவுட் செய்து வெளியேற்றினார்.

இப்படி ஒருபக்கம் மும்பை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சரிவடைந்த நிலையில், தலைவர் ரோகித் ஷர்மாவும் பதற்றத்தோடு ஆடி வந்தார். ஒரு கட்டத்தில் அவரும் பவுண்டரி லைனில் சிறப்பான ஒரு கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார்.

பொல்லார்ட் அதிரடி காட்ட தொடங்கிய நேரத்தில் 7 ஓட்டங்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பொல்லார்ட்டை தான் மும்பை அணி பெரிதாக நம்பியிருந்தது, ஆனால் அவரும் சொதப்பியதால், 100-ஓட்டங்களைக் கூட தாண்டுவது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கொல்லாம் நிவாரணமாக இருந்தது, இடது கை மட்டையாளர் கருணால் பாண்ட்யாதான்.

இவர் ஒருமுனையில் நின்று, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், தடுக்க வேண்டிய பந்துகளை தடுத்தும் ஆடினார்.

47 ஓட்டங்களை குவித்த இவர் தன்னம்பிக்கையோடு அந்த ஓட்டங்களை அடித்திராவிட்டால், மும்பை இன்னும் மோசமாக சுருண்டிருக்கும்.

கருணால் பாண்ட்யாவின் அந்த எண்ணிக்கை தான் மும்பை அணி 1-ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

Previous Post

கடைசி ஓவரில் நடந்த த்ரில்: ஒரு ஓட்டத்தில் கிண்ணத்தை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

Next Post

இரவோடு இரவாக சந்தித்த மைத்திரி, ரணில் : அமைச்சரவையில் மாற்றமா?

Next Post
இரவோடு இரவாக சந்தித்த மைத்திரி, ரணில் : அமைச்சரவையில் மாற்றமா?

இரவோடு இரவாக சந்தித்த மைத்திரி, ரணில் : அமைச்சரவையில் மாற்றமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures