Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மைத்திரி, ரணில் மீது சுமந்திரன் பாய்ச்சல்

March 8, 2018
in News, Politics, Uncategorized, World
0

“ஒவ்வொரு முறையும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. ஆனால், அவற்றால் எந்தப் பயனுமில்லை. அதற்காக அதை அமைக்கவேண்டாம் என்று கூறவில்லை. பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பெரிய மனமாற்றமே தேவையாக இருக்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:-
“சரியானவற்றைச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, இந்த அமைச்சரவையில் உள்ளவர்களுக்கோ முதுகெலும்பில்லை. நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்கள், சுயமரியாதையுடன், பயமில்லாமல் வாழ முடியாது என்றால் நாட்டை ஆள்வதற்கு உங்களுக்குத் தகுதியில்லை.
2015ஆம் ஆண்டு எதனை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்தார்களோ அதை இந்த அரசு தவிடுபொடியாக்கியிருக்கின்றது. இந்தச் சம்பவத்தை வைத்து மாத்திரம் நான் இவ்வாறு தெரிவிக்கவில்லை. முன்னைய அரசு என்ன செய்ததோ அதனையே இந்த அரசும் செய்கின்றது. பேரினவாதத்துக்கு பாலூட்டி வளர்க்கின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பேரினவாதிகள் கூடுதலான வாக்குகளைப் பெற்று விட்டார்கள் என்பதற்காக, இந்த அரசு பேரினவாதிகளைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஈடுபடுகின்றது. மக்கள் இதற்காக இந்த அரசுக்கு வாக்களிக்கவில்லை” – என்றார்.

Previous Post

தமிழ் மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது தடுக்க பள்ளிவாசல் நிருவாகம் ஒத்துழைக்கவில்லை

Next Post

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரும் ஐ.நா

Next Post

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரும் ஐ.நா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures