மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் செயற்படுவதற்கும் இவர்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாண சபையின் பிரதித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

