காவல்துறை அதிகாரிகள் மேலும் 39 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 23 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பொரளை காவல்துறை நிலையத்துடன் இணைக்கப்பட்ட 8 காவல்துறை அதிகாரிகள் , இராஜகிரிய பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்ட 02 காவல்துறை அதிகாரிகள் , வாழைத்தோட்டம் காவல்துறை நிலையத்தில் 02 காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கோட்டை மற்றும் நீர்கொழும்பு காவல்துறை நிலையங்களிலும் , கொழும்பு நகர போக்குவரத்து பிரிவிலும் , குற்றப்புலனாய்வுத் துறையில் தலா ஒரு அதிகாரிக்கும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.