Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

March 20, 2018
in News, Politics, World
0
மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

“மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைத்த எமது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவை நாம் வரவேற்கிறோம்.

இந்தப் பரிந்துரைகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவு இருப்பது குறித்து மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும், மனித உரிமை மீறல்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களின் மீறல்கள், மத சிறுபான்மையினர் மீதான அண்மைய தாக்குதல்கள் குறித்த அறிக்கைகள் எம்மைக் கவலை கொள்ள வைக்கின்றன.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்குமாறும், மத சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டு இடங்களையும் பாதுகாக்குமாறும், நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் மற்றும் அதனை மீள உறுதிப்படுத்திய 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறோம்.

சிறிலஙகா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பூகோள கால மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றங்களை எதிர்பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Previous Post

போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் அதிரடி

Next Post

நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு

Next Post

நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures