Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது – சம்பிக்க ரணவக்க

March 2, 2022
in News, Sri Lanka News
0
கோட்டாபய கூறுவது முற்றிலும் பொய் | அம்பலப்படுத்திய சம்பிக்க

நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. நாட்டில் டொலருமில்லை, ரூபாவுமில்லை. மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்னுற்பத்தி நிலையங்களின் நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் தினசரி நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்படுகிறது.

எண்ணெய் கப்பல்களுக்கு டொலர் செலுத்த முடியாத நெருக்கடியை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ளது.

நாட்டில் தற்போது டொலருமில்லை,ரூபாவுமில்லை. நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. மின்விநியோக துண்டிப்பால் சுற்றுலாத்துறை சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள காரணத்தினால் அரச நிறுவனங்களுக்கு கடன் வழங்குதலை அரச வங்கிகள் மறுத்துள்ளன.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்  பதவிக்கு வந்த போது பொருளாதாரத்தை சீரமைக்கும் கொள்கை திட்டங்களும்,நடவடிக்கைகளும் உள்ளடக்கிய 6 மாத கொள்கையினை முன்வைத்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் முன்வைத்த 6மாத கொள்கை திட்டம் மறக்கடிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் தற்போது தான் விளங்கிக்கொண்டுள்ளார்.

அத்தியாவசிய பொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.மருந்து பொருட்களின் இறக்குமதியை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.

நெருக்கடியான நிலைமை குறித்து நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.

விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. எதிர்வரும் காலங்களில் பாரிய நெருக்கடியை முழு நாடும் எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் | உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் கருத்து

Next Post

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

Next Post
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures