அமெரிக்காவின் சியாட்டில் டகோமா நகரில் ஹாரிசன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் வேலை பார்த்து கொண்டிருந்த, 29 வயது மதிக்கத்தக்க மெக்கானிக் ஒருவர் விமானத்தை திருடி சென்றார்.
இதனையறிந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ராணுவ விமானங்களும் திருடப்பட்ட விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டன.ஆனால், புக்கெட் பகுதியில் உள்ள சிறிய தீவு ஒன்றில் விமானம் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இதில், மெக்கானிக்கு உயிரிழந்தார். விமானத்தை இயக்க தெரியாத மெக்கானிக் சாகசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதே விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் பயங்கரவாதிகளுக்கு எந்த தொடர்புமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

